நீண்டதூரப் பயணமும்
நீயில்லாச் சயனமும்
எனக்குள்
சோர்வைத் தந்தாலும்,
எழுத்தாளர் மாநாட்டில்
எழுந்திட்ட கோஷங்கள்
என்னைத்
தூக்கி நிறுத்தின.
சமுதாய நலம்பேண
ஏதேனும்
எழுதுவோமென்று
புத்துணர்ச்சி கொண்டு
பேனாவைப் பிடிக்கிறேன்,
அப்போதும்கூட
சுயநலமாய் வருகிறது
உன் பற்றிய கவிதை!
- மன்னூரான்
No comments:
Post a Comment