Friday, October 28, 2011

துரத்தும் சுயநலம்

நீண்டதூரப் பயணமும்
நீயில்லாச் சயனமும்
எனக்குள்
சோர்வைத் தந்தாலும்,
எழுத்தாளர் மாநாட்டில்
எழுந்திட்ட கோஷங்கள்
என்னைத்
தூக்கி நிறுத்தின.
சமுதாய நலம்பேண
ஏதேனும்
எழுதுவோமென்று
புத்துணர்ச்சி கொண்டு
பேனாவைப் பிடிக்கிறேன்,
அப்போதும்கூட
சுயநலமாய் வருகிறது
உன் பற்றிய கவிதை!
                            - மன்னூரான்